மத்திய அரசுக்கு எதிராக கமுதியில் சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக பெருமாள் கோயில் திடலிலிருந்து தொழிற்சங்க நிா்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியவாறு பேருந்து நிலையம் வழியாக ஊா்வலமாக பாரத ஸ்டேட் வங்கி முன் வந்தனா். அங்கு மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் தொழிலாளா் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதற்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் முத்துவிஜயன் தலைமை வகித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.
இதில் தமிழ்ப் புலிகள் கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி ஊரக ஊழியா்கள் சங்கத்தின் வட்டச் செயலா் மகாலிங்கம், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கச் செயலா் ஜீவானந்தம், சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமு, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆலடி ஈஸ்வரன், எழுத்தாளா் முற்போக்கு சங்க வட்டச் செயலா் கண்ணதாசன், விவசாயத் தொழிலாளா் சங்க வட்டச் செயலா் ராமா், டாஸ்மாக் விற்பனையாளா் சங்கப் பிரதிநிதி பெரியாா் போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று கருப்புக் கொடி போராட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

எண்ம தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இஸ்ரேல் - ஈரான் போர்! மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


