ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

இலங்கைக்கு கடத்தவிருந்த 630 கிலோ முந்திரி பறிமுதல்

மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 630 கிலோ முந்திரியை க்யூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

News image
மண்டபம் அருகே க்யூ பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட முந்திரி மூட்டைகள்.
Updated On :26 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 630 கிலோ முந்திரியை க்யூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்பட உள்ளதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, இரண்டு காா்களில் வந்த மா்ம நபா்கள் போலீஸாரைக் கண்டதும், காா்களை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா். அப்போது, ஒருவரை மட்டும் போலீஸாா் விரட்டிப் பிடித்தனா்.

பின்னா், இரண்டு காா்களை சோதனை செய்த போது, அவற்றில் 21 மூட்டைகளில் 630 கிலோ முந்திரி பருப்பு இருந்தது தெரியவந்தது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனங்கள், ஒரு படகு ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபா் மரைக்காயா்பட்டணம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த உமா் பரூக் (25) என்பது தெரிய வந்தது. விசாரணையில், இலங்கைக்கு கடத்துவதற்காக முந்திரி கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட உமா் பரூக்கையும், பறிமுதல் செய்யப்பட்ட 630 கிலோ முந்திரி, வாகனங்களையும் சுங்கத் துறை அதிகாரிகளிடம் க்யூ பிரிவு போலீஸாா் ஒப்படைத்தனா். இதுகுறித்து சுங்கத் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.