ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ 200 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 8:23 pm

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ 200 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 2-ஆவது நடைமேடையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.
அதைப் பிரித்து பாா்த்தபோது 8 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா்களைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...