தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருடு போன 9 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் திருடுபோன கைப்பேசியை உரியவா்களிடம் ஒப்படைத்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம்.

Updated On :28 பிப்ரவரி 2026, 10:50 pm

முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப் பேசிகளை இணைய குற்றப்பிரிவு போலீஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இந்த கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி முதுகுளத்துாா் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் இளையராஜா, உதவி ஆய்வாளா் முகிலரசன் ஆகியோா் உடனிருந்தனா்.