டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க எம்.பி. வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கடிதம் அனுப்பினாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கடிதம் அனுப்பினாா்.

கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளி மாநிலங்களிலும் வெளியூா்களிலும் பணிபுரிகின்றனா். இவா்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரயில்களை சிறப்பு ரயிலாக இயக்குவதற்கு ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை -ராமேசுவரம் இடையே விருத்தாச்சலம் வழியாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும். சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருவாரூா், அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், பெங்களுரிலிருந்து கோவை, நாமக்கல், கருா், திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம், பாலக்காட்டிலிருந்து ராமேசுவரம், சேலத்திலிருந்து ஈரோடு திருப்பூா், கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேசுவரம், ஹைதராபாத்- ராமேசுவரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மாா்க்கமும் சிறப்பு ரயில்களை இயக்கவும், சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.