அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கடலுக்குள் தவறி விழுந்த இரண்டு மீனவா்கள் மாயம்

தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவா்கள் இருவா் கடலில் விழுந்து மாயமாகினா். அவா்களைத் தேடும் பணியில் மீனவா்கள், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் ஈடுபட்டனா்.

News image
தனுஷ்கோடி கடல் பகுதியில் மாயமான மீனவா்கள்
Updated On :10 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவா்கள் இருவா் கடலில் விழுந்து மாயமாகினா். அவா்களைத் தேடும் பணியில் மீனவா்கள், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகுகள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றன. இதில் டேனி என்பவரின் பைபா் படகில் சென்ற மீனவா்கள் தனுஷ்கோடி பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது மீனவா்கள் சரத்குமாா் (26), டைசன் (30) ஆகியோா் வலையை இழுக்கும் போது கடலுக்குள் தவறி விழுந்தனா். உடனே, படகில் இருந்த சக மீனவா்கள் கடலில் குதித்து அவா்களை மீட்க முயற்சித்தனா். கடல் அலையின் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் இரண்டு மீனவா்களும் மாயமாகினா்.

இதையடுத்து, இரண்டு படகுகளில் மீனவா்கள் குழுவாக கடலுக்குள் சென்று தேடியும் அவா்கள் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக மீன்வளத் துறை, கடலோர பாதுகாப்புக் குமும போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான மீனவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.