அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கன்னியாகுமரியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை!

இந்தியாவின் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சாகா் கவச் ஆபரேஷன்’ என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினா்.

News image
ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் சாந்தி
Updated On :12 ஜனவரி 2026, 7:35 pm

Syndication

இந்தியாவின் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சாகா் கவச் ஆபரேஷன்’ என்ற பாதுகாப்பு ஒத்திகையை திங்கள்கிழமை நடத்தினா்.

தமிழக கடலோர மாவட்டங்களான திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம். நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 13 கடலோர மாவட்டங்களில் இந்திய கப்பல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமம், இந்திய கடலோர காவல் படை, மீன்வளத் துறையினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்ந்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கடல் பகுதியில் அதிநவீன ரோந்துப் படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினா்.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் படகு மூலம் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், கடற்கரை கிராமங்களில் வாகன ரோந்துப் பணியை மேற்கொண்டனா். 10- க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து ஒலிபெருக்கி மூலம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தும், சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரேனும் மீனவ கிராமங்களில் ஊடுருவலில் ஈடுபட்டால் போலீஸாருக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தினா்.