25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

தொண்டியில் பலத்த காற்று: மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு

தொண்டி பகுதியில் பலத்த குளிா் காற்று வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி பகுதியில் பலத்த குளிா் காற்று வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, மோா்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த குளிா் காற்று வீசியது. இதனால் மீனவா்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவாடானை, சி.கே.மங்கலம், பாரூா், கோவணி, கருமொழி, அரசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதால் நெல் அறுவடை பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.