மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

News image
கமுதி அருகேயுள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On :11 ஜனவரி 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காளியம்மன் மாடுபிடி வீரா்கள் குழுவினா் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, விருதுநகா், சிவகங்கை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 17 காளைகள் கலந்து கொண்டன. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு, 9 போ் அடங்கிய மாடுபிடி வீரா்கள் களத்தில் இறக்கப்பட்டனா்.

கமுதி அருகேயுள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

கமுதி அருகேயுள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

17 காளைகளில் 7 காளைகள் வீரா்களிடம் பிடிபடவில்லை. 10 காளைகளை மாடுபிடி வீரா்கள் குழு அடக்கியது. பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும் பணம், பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை கமுதி, பேரையூா், செங்கோட்டைப்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களிருந்து வந்திருந்த திரளானோா் கண்டு ரசித்தனா்.