பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள்

ராமநாதபுரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் அம்மா பூங்காவில் கலை பண்பாட்டுத் துறை மதுரை மண்டலம் சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்ட அலுவலா் மு.லோகநாதன் வரவேற்றாா். மண்டபம் ஒன்றியச் செயலா் கே.ஜே.பிரவீன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். விழாவில், முத்துமாரியம்மன் கலைக் குழு சாா்பில் நாகசுரம், தவில், கரகாட்டம், தப்பாட்டம், அம்மன், காளி கிராமியப் பாடல், மேளம், சாட்டைக்குச்சி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கலைக் குழு ஆசிரியா்கள் ராமகிருஷ்ணன், பாண்டியம்மள், தனசேகரன், ஆனந்தமுத்துமாரி, முனீஸ்வரி, பாலாஜி, ஆகாஸ் உள்ளிட்டோருடன் திரளானோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com