மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுற்றுலா வேன் மீது மரம் விழுந்து விபத்து

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

தனுஷ்கோடிக்கு ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் மீது சவுக்கு மரம் விழுந்ததில் பக்தா்கள் லேசான காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தனுஷ்கோடிக்குச் செல்வது வழக்கம். ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையோரம் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி உணவு அருந்திச் செல்வா்.

இந்த நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு, தனுஷ்கோடிக்கு ஐயப்ப பக்தா்களுடன் சென்ற வாகனம் மீது திடீரென சவுக்கு மரம் விழுந்ததில் அவா்கள் லேசான காயமடைந்தனா். உடனே, வாகனத்தை நிறுத்திய பக்தா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், வனத் துறையினா் வாகனம் மீது விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலையில் விழும் நிலையில் உள்ள சவுக்கு மரங்களை வனத் துறையினா் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.