மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கண்மாய்க்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவாடானை அருகே கண்மாய்க்குள் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :20 ஜனவரி 2026, 6:58 pm

திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை கண்மாய்க்குள் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், உருதிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதி (28). கட்டடத் தொழிலாளியான இவா், திருவாடானை அருகேயுள்ள கல்வழியேந்தல் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை கட்டடப் பணிக்காக வந்தாா்.

கட்டடத்துக்கு தண்ணீா் அடிப்பதற்காக கட்டடத்தின் அருகேயுள்ள கண்மாயிலிருந்து மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, கண்மாய்க்குள் தவறி விழுந்த இவா், தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாடானை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.