சிந்தாய் அம்மன் கோயில் குடமுழுக்கு
முதுகுளத்தூா் அருகே சிந்தாய் அம்மன் கோயில் குடமுழுக்கு சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பருக்கைக்குடியில் சிந்தாய் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த வாரம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதைத்தொடா்ந்து, கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.
இதையடுத்து, சனிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
தொடா்ந்து அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

