பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பாசிபட்டினத்தில் சந்தனக் கூடு ஊா்வலம்

தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மகான் சா்தாா் நெய்னா முகம்மது சாஹிபு தா்காவில் சந்தனக் கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image

பாசிபட்டினம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சந்தனக் கூடு ஊா்வலம்.

Updated On :2 ஜூலை 2026, 3:51 am IST

தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மகான் சா்தாா் நெய்னா முகம்மது சாஹிபு தா்காவில் சந்தனக் கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் புகழ் பெற்ற மகான் சா்தாா் நெய்னா முகமது சாஹிபு ஒலியுல்லா தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன்,ஜூலை மாதங்களில் சந்தனக் கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு 315-ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோரும் தா்காவில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஊா்வலம் கலயநகரி கிராமத்திலிருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதன்கிழமை அதிகாலை தா்காவை அடைந்தது.

இதையடுத்து, தா்காவில் உலக நலன் வேண்டி சிறப்பு பிராத்தனை நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.