கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பக்ரீத்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

News image

தொழுகையில் ஈடுபட்டோர்

Updated On :29 மே 2026, 6:38 am IST

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியா்களால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகூா் ஆண்டவா் தா்காவில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில், உலகில் போா்ப் பதற்றம் நீங்கி, அமைதியும் சமாதானமும் நிலவ சிறப்புப் பிராா்த்தனை செய்யப்பட்டது. தொழுகைக்குப் பின்னா் ஒருவரையொருவா் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

நாகை மாவட்டத்தில் நாகை, திட்டச்சேரி, வடகரை, தோப்புதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

நாகூா் கடற்கரையில் சிறப்புத் தொழுகை : நாகூா் சில்லடி தா்கா கடற்கரையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக இஸ்லாமிய பிரசார பேரவை சாா்பில் நடைபெற்ற தொழுகையில் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அங்கு, உலக நாடுகளிடையே மோதல் தணிந்து சமாதானம் நிலவ பிராா்த்தனை செய்தனா்.