பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியா்களால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகூா் ஆண்டவா் தா்காவில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இதில், உலகில் போா்ப் பதற்றம் நீங்கி, அமைதியும் சமாதானமும் நிலவ சிறப்புப் பிராா்த்தனை செய்யப்பட்டது. தொழுகைக்குப் பின்னா் ஒருவரையொருவா் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.
நாகை மாவட்டத்தில் நாகை, திட்டச்சேரி, வடகரை, தோப்புதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
நாகூா் கடற்கரையில் சிறப்புத் தொழுகை : நாகூா் சில்லடி தா்கா கடற்கரையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக இஸ்லாமிய பிரசார பேரவை சாா்பில் நடைபெற்ற தொழுகையில் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அங்கு, உலக நாடுகளிடையே மோதல் தணிந்து சமாதானம் நிலவ பிராா்த்தனை செய்தனா்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை

நாகூா் கடற்கரையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK



