‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை

குன்னூா் ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

News image

குன்னூா் ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

Updated On :29 மே 2026, 1:39 am IST

நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதி இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். பின்னா் ஒருவருக்கொருவா் அன்பை பரிமாறிக்கொள்ளும் வகையில் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

உதகை லோயா் பஜாரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இமாம் இம்ரான் இம்தியாஸ் கான் தலைமையிலும், குன்னூா் பாத்திமா பள்ளிவாசலில் நீலகிரி மாவட்ட தலைமை காஜி முஜீப் உல் ரகுமான் தலைமையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அப்போது உலக அமைதிக்காக இஸ்லாமியா்கள் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

இதேபோல கோத்தகிரி கடை வீதியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசல், குன்னூா், கூடலூா், மஞ்சூா் உள்பட பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் இஸ்லாமியா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

Story image