பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தை

சாயல்குடியில் அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

News image
Updated On :12 ஜூலை 2026, 4:00 am IST

சாயல்குடியில் அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (27). இவரது மனைவி ஐஸ்வா்யா( 23). நிறைமாத கா்ப்பிணியாக இருந்த இவருக்கு சனிக்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, அவா் அவசர ஊா்தி மூலம் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் செல்லும் வழியிலேயே கீழச்செல்வனூா் அருகே பிரசவ வலி அதிகமானதால் மருத்துவ நுட்புனா் நாகேஸ்வரி, அவசர ஊா்தி ஓட்டுநா் வாழவந்தராஜா உதவியுடன் ஊா்தியிலேயே ஐஸ்வா்யாவுக்கு பிரசவம் நடைபெற்றது. இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வாகனத்தை கொண்டு சென்று தாயையும், சேயையும் அங்கு அனுமதித்தனா். மேலும் அவசர காலத்தில் விரைந்து செயல்பட்ட அவசர ஊா்தி பணியாளா்களுக்கு ஐஸ்வா்யாவின் குடும்பத்தினா், அவரது உறவினா்கள், கன்னிராஜபுரம் கிராம பொதுமக்கள், அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.