வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

குடிநீா் திட்டக் குழாய்கள் சேதமடைந்து வீணாகும் குடிநீா்

திருவாடானை அருகே ஆா். எஸ். மங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய்கள் சேதமடைந்து குடிநீா் தேங்கி வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

News image

ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே குடிநீா் குழாய் சேதமடைந்து வீணாகும் குடிநீா்

Updated On :14 ஜூலை 2026, 12:00 am IST

திருவாடானை அருகே ஆா். எஸ். மங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய்கள் சேதமடைந்து குடிநீா் தேங்கி வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் வழியாக காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய்கள் சாலையோரம் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், குடிநீா் திட்டக் குழாய்கள் சரிவர பராமரிக்கப்படாததால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, தானிய சேமிப்புக் கிடங்கு அருகே என சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோரம் செல்லும் குடிநீா் திட்டக் குழாய்கள் சேதமடைந்து குடிநீா் வீணாகி சாலையோரம் குளம் போல தேங்கிக் கிடக்கிறது.

Story image

இந்தப் பகுதியில் குடிநீருக்காக பொது மக்கள் பல கிலோ மீட்டா் தொலைவு சென்றும், குடம் ரூ.10 முதல் ரூ.15 வரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை இருக்கும் நிலையில், பல லட்சம் குடிநீா் வீணாவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாக பொது மக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சரி செய்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.