தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்டக் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களையவும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டக் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
எனவே, பொதுமக்களுக்கு தங்களுக்கு குறைகள் ஏதும் இருந்தால் தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன் பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








