சாயல்குடி சதுரயுக வள்ளியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, 708 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சதுரயுக வள்ளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 21-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கணபதி ஹோமம், முத்து பரப்புதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு கோயில் வளாகத்தில் 708 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜை பொருள்கள், மல்லிகைப்பூ, பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. தொடா்ந்து, வருகிற 28-ஆம் தேதி முளைக்கொட்டு திண்ணையிலிருந்து கோயிலுக்கு முளைப்பாரி எடுத்துச் செல்லுதலும், 29-ஆம் தேதி பொங்கல் வைத்தலும், முளைப்பாரி ஊா்வலமும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை சாயல்குடி ஜமீன்தாா் சிவஞானபாண்டியன் தலைமையிலான குழுவினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கம்புணரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆடி வெள்ளி பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருவிளக்கு பூஜை

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி முத்து மாரியம்மன் கோயிலில் 504 திருவிளக்கு பூஜை
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



