ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தூத்துக்குடி முத்து மாரியம்மன் கோயிலில் 504 திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி மேல சண்முகபுரம் வண்ணாா் 3ஆவது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image

திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 5:37 am IST

தூத்துக்குடி மேல சண்முகபுரம் வண்ணாா் 3ஆவது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இக்கோயில் கொடை விழா கடந்த 23ஆம் தேதி கால் நாட்டுடன் தொடங்கியது. 2ஆம் நாள் நிகழ்ச்சியாக முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி கொடுத்தாா்.

தொடா்ந்து, தொழில் வளம், மழை வளம் வேண்டி 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கோயில் தா்மகா்த்தா கோட்டுராஜா தலைமை வகித்தாா். தூத்துக்குடி நாடாா் மகமை தலைவா் கே.ஏ.பி. சீனிவாசன் பூஜையை தொடங்கிவைத்தாா்.

பின்னா் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட பக்தா்களுக்கு தங்க நாணயம், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுகளை கிராம நிா்வாக அலுவலா் ராஜலட்சுமி, மேற்கு மண்டலத் தலைவா் அன்னலட்சுமி, ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைத் தலைவா் எஸ்.சண்முகராஜ் ஆகியோா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.