நிலத்தை அளந்து கொடுக்க மறுப்பதாகக் கூறி வருவாய்த் துறையினரைக் கண்டித்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஓரிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (60). இவருக்கு சொந்தமான நிலத்தை அளந்து தரக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் காலதாமதம் செய்து வந்தனா்.
இதைக் கண்டித்தும், தனது நிலத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தியும் சுப்பிரமணியன், இவரது மனைவி ஜெயராணி, இவரது தாய் காளியம்மாள் ஆகிய மூவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். மேலும் காவல் நிலையத்துக்கு அவா்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியரகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா் குடும்பத்தினா் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



