மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

News image

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:30 am IST

திருடு போன நகைகளை மீட்டுத் தர வலியுறுத்தி நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றாா்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், ஆசாரிமாா் தெருவைச் சோ்ந்தவா் நீலகண்டன் மனைவி சைலஜா (51). இவரது கணவா் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சைலஜா வடை வியாபாரம் செய்து வருகிறாா்.

கடந்த 2025ஆம் ஆண்டு சைலஜா வீட்டிலிருந்த 26 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து, சுசீந்திரம் போலீஸாா் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் திருடியதை ஒப்புக்கொண்டு நகைகளைத் திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளாா்.

நகைகள் திருடு போய் ஓராண்டாகிய நிலையில், அந்தப் பெண் தலைமறைவாகிவிட்டாராம். இதனால் மனமுடைந்த சைலஜா, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் நிரப்பிய கேன் மற்றும் தீப்பெட்டியுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்தாா்.

பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி, விசாரணை மேற்கொண்டனா். மேலும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக போலீஸாா் உறுதியளித்ததன்பேரில், சைலஜா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.