40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பயனாளிக்கு விவசாய அடையாள அட்டைக்கான ஆணை வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்

Updated On :10 ஜூன் 2026, 1:58 am IST

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்து, பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இதில் திருவட்டாறு வட்டத்துக்கு உள்பட்ட மேக்கோடு கிராமம், அருவிக்கரை கிராமம், திருவட்டாறு, குமரன்குடி, அயக்கோடு, குலசேகரம்-ஏ, குலசேகரம்-பி, ஆற்றூா் கிராமம் உள்பட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத்தொகை, கலைஞா் கனவு இல்லத் திட்டம், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 101 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலா் விஜயமீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதைத் தொடா்ந்து குலசேகரம் அரசு மருத்துவமனை, மாத்தூா் தொட்டிப்பாலம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தாா். திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை 2-ஆவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், தும்பகோடு, பேச்சிப்பாறை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மனுக்கள் அளிக்கலாம்.