மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த ஊராட்சிச் செயலா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கூகுடி ஊராட்சிச் செயலா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த கூகுடி ஊராட்சிச் செயலா் சகாதேவன்.

Updated On :3 ஜூன் 2026, 1:36 am IST

திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கூகுடி ஊராட்சிச் செயலா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வைரவன் மகன் சகாதேவன் (51). இவா் கூகுடி ஊராட்சியில் ஊராட்சிச் செயலராகப் பணியாற்றி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் திருவாடானை நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, சம்பூரணி அருகே மங்களகுடி சாலையில் வந்த போது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சகாதேவன்சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Story image