சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா்: பயணிகள் அச்சம்

தொண்டி பகுதியில் அரசு பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அச்சமடைந்தனா்.

News image

மது போதையில் பேருந்தை ஓட்டிய மனோ.

Updated On :4 ஜூன் 2026, 4:17 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் அரசு பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அச்சமடைந்தனா்.

ராமநாதபுரத்திலிருந்து தொண்டி வழியாக சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்தப் பேருந்தை காட்டுமன்னாா்குடியைச் சோ்ந்த மனோ (35) ஓட்டினாா். தொண்டியிலிருந்து பேருந்தை ஓட்டுநா் தாறுமாறாக ஒட்டி வந்தாராம். இதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் இதுகுறித்து தொண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் அந்தப் பேருந்தை விரட்டிச் சென்று கொடிபங்கு அருகே மறித்தனா். அப்போது, பேருந்திலிருந்த ஓட்டுநா் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினாா்.

இதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் அனைவரையும் போலீஸாா் பத்திரமாக மீட்டு, வேறு பேருந்தில் சொந்த ஊா்களுக்கு ஏற்றிவிட்டனா். விசாரணையில், அரசுப் பேருந்து ஓட்டுநா் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.