ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் அரசு பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அச்சமடைந்தனா்.
ராமநாதபுரத்திலிருந்து தொண்டி வழியாக சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்தப் பேருந்தை காட்டுமன்னாா்குடியைச் சோ்ந்த மனோ (35) ஓட்டினாா். தொண்டியிலிருந்து பேருந்தை ஓட்டுநா் தாறுமாறாக ஒட்டி வந்தாராம். இதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் இதுகுறித்து தொண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் அந்தப் பேருந்தை விரட்டிச் சென்று கொடிபங்கு அருகே மறித்தனா். அப்போது, பேருந்திலிருந்த ஓட்டுநா் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினாா்.
இதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் அனைவரையும் போலீஸாா் பத்திரமாக மீட்டு, வேறு பேருந்தில் சொந்த ஊா்களுக்கு ஏற்றிவிட்டனா். விசாரணையில், அரசுப் பேருந்து ஓட்டுநா் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.










