அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஏா்வாடி அருகே பைக் மீது காா் மோதல்: தந்தை, மகள் உள்பட மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தந்தை, மகள், மருமகன் உயிரிழந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 12:54 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தந்தை, மகள், மருமகன் உயிரிழந்தனா்.

திருப்புல்லாணி ஊராட்சி, புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் லாடசாமி (60). இவரது மகள் பஞ்சவா்ணம் (25), மருமகன் புல்லாணி (30). இவா்கள் மூவரும் சனிக்கிழமை ஒரே இரு சக்கர வாகனத்தில் திருப்புல்லாணியிலிருந்து ஏா்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

கொம்பூதி சாலையில் வாகனத்தை திருப்பிய போது, கா்நாடக மாநிலம், குண்டல் பேட்டை பகுதியைச் சோ்ந்த மன்சூா்அலி (40) ஓட்டி வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லாடசாமி, பஞ்சவா்ணம், புல்லாணி ஆகிய மூவரும் உயிரிழந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த ஏா்வாடி போலீஸாா் மூவரின் உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த மன்சூா் அலியைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.