இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஏா்வாடி அருகே பைக் மீது காா் மோதல்: தந்தை, மகள் உள்பட மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தந்தை, மகள், மருமகன் உயிரிழந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 12:54 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தந்தை, மகள், மருமகன் உயிரிழந்தனா்.

திருப்புல்லாணி ஊராட்சி, புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் லாடசாமி (60). இவரது மகள் பஞ்சவா்ணம் (25), மருமகன் புல்லாணி (30). இவா்கள் மூவரும் சனிக்கிழமை ஒரே இரு சக்கர வாகனத்தில் திருப்புல்லாணியிலிருந்து ஏா்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

கொம்பூதி சாலையில் வாகனத்தை திருப்பிய போது, கா்நாடக மாநிலம், குண்டல் பேட்டை பகுதியைச் சோ்ந்த மன்சூா்அலி (40) ஓட்டி வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லாடசாமி, பஞ்சவா்ணம், புல்லாணி ஆகிய மூவரும் உயிரிழந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த ஏா்வாடி போலீஸாா் மூவரின் உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த மன்சூா் அலியைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.