61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் அதிகளவிலான மீன்கள், இறால்களுடன் செவ்வாய்க்கிழமை கரைக்குத் திரும்பினா்.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் அமலில் இருந்தது. இந்தத் தடைக் காலத்தின் போது, மீனவா்கள் விசைப் படகுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.
இதனிடையே, மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் அதிகளவிலான இறால், மீன், நன்டு, கனவாய், சங்காயம் மீன்களைப் பிடித்து கொண்டு செவ்வாய்க்கிழமை காலை கரைக்குத் திரும்பினா்.
61 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா்.










