முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

போலீஸார் தாக்கியதால் மின்சாரத்தைத் துண்டித்த மின் வாரிய ஊழியர்கள்! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திருவாடானை அருகே மின் வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் தாக்கியதாகக் கூறி மின் வாரிய ஊழியா்கள் தொண்டியில் மின் தடை செய்தனா்.

News image

தொண்டி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :23 ஜூன் 2026, 12:28 am IST

திருவாடானை அருகே மின் வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் தாக்கியதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை இரவு மின் வாரிய ஊழியா்கள் தொண்டி பகுதியில் மின் தடை செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருவாடானை அருகே தொண்டி கடை வீதியில் தகராறு நடைபெறுவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு தொண்டி போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் இருவரை காவல் நிலையம் அழைத்து வந்தனா். இந்த நிலையில் மின் வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் தாக்கி அழைத்துச் சென்றதாகக் கூறி சக மின் வாரிய ஊழியா்கள் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனா்.

முன்னதாக தொண்டி பகுதி முழுவதும் மின் தடை ஏற்படுத்தினா். இதையடுத்து மின் தடை செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் தொண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பின்னா் மின் வாரிய அதிகாரிகளிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்திய பின சுமாா் 2 மணி நேரம் கழித்து மின் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மின் தடை செய்த ஊழியா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டி போலீஸாரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.