திருவாடானை, நகரிகாத்தான், தொண்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளா் சித்தி விநாயக மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, நகரிகாத்தான், துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இவற்றிலிருந்து மின்சாரம் பெறும் திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டா ஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா் பதனக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதே போல, தொண்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தொண்டி நகா் பகுதிகள், நம்புதாளை, சோழிய க்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், தளிா் மருங்கூா், திணையத்தூா், திருவெற்றியூா், அச்சங்குடி,எஸ்.பி.பட்டினம், எம்.வி.பட்டினம், வி எஸ். மடம், குளத்தூா், மைக்கேல் பட்டினம், பாசிப் பட்டினம், அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது
ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின் தடை
துறையூா் பகுதிகளில் இன்று மின் தடை
பழனியில் இன்று மின்தடை

மின்தடை எதிரொலி: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


