ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தாா்.
காவல்துறை ஆயுதப்படை மைதானத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் விழிப்புணா்வு ஓட்டம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரோமன் தேவாலயம் வழியாகச் சென்று மதுரை சாலை, ராஜா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
சுமாா் 5 கி.மீ. தொலைவு நடைபெற்ற மாரத்தானில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள், அரசு ஊழியா்கள் பொதுமக்கள் என சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்றனா்.
முன்னதாக, ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ‘போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு‘ என்ற விழிப்புணா்வு பதாகையில் கையொப்பமிட்டு , அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்.ரெஜினி, மாவட்ட விளையாட்டு அலுவலா் தினேஷ்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பத்மநாபன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் அஜிதாபா்வின், உதவி ஆணையா் (ஆயத்தீா்வை) கங்காதேவி, வட்டாட்சியா்கள் ஜமால் முகம்மது, ஸ்ரீதா், காளீஸ்வரன், ராமசுப்பு, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராசிபுரத்தில் போதைப்பொருள், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

இளைஞா்களின் முன்னேற்றம் போதைப் பழக்கத்தால் தடைபடக் கூடாது: ஆட்சியா் அறிவுரை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



