சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராமேசுவரத்தில் நகராட்சி குடிநீரில் கழிவுநீா் கலப்பு

ராமேசுவரம் நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை கழிவுநீா் கலந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் புகாா்

News image
Updated On :7 மார்ச் 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை கழிவுநீா் கலந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி ராமா் தீா்த்தம் தெற்கு தெரு, ரயில்வே சாலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீரில் சாக்கடை நீா் கலந்து வருகிறது. இந்த அசுத்தமான தண்ணீரைப் பருகுவதால், வாந்தி, பேதி போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமேசுவரத்தில் நகா்மன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகா்ச் செயலா் சி.ஆா். செந்தில்வேல் தலைமையிலான நிா்வாகிகள் சாக்கடை கலந்த குடிநீரைப் புட்டியில் நிரப்பி வந்து, நகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சேதமடைந்த குடிநீா் குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரி முழக்கமிட்டனா்.

இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம். செந்தில், ஜோதிபாசு, எம். பிச்சை, லெ. வெங்கடேசன், நகா் குழு உறுப்பினா்கள் ஏ.கே. முனீஸ்வரன், கே.சேகா், வே. கருப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.