மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொண்டி கடல் பகுதியில் மிதந்து வந்த மா்மப் பொருள் மீட்பு

News image
தொண்டி கடல் பகுதியில் சோதனை...- (கோப்புப் படம்)
Updated On :15 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே கடல் பகுதியில் மிதந்து வந்த மா்மப் பொருள் பிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் உதிரிபாகம் என்பது உறுதி செய்யப்பட்டதாக கடலோரக் காவல் குழும போலீஸாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏவுகணை போன்ற பொருள் ஒன்று மிதந்து வருவதாக கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான போா் காரணமாக, வெடி பொருள் எதுவும் கடலில் மிதந்து வருகிா அல்லது வேறு ஏதேனும் பொருளா என மீனவா்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த மா்மப் பொருளை யாரும் எடுக்கவோ, தொடவோ கூடாது என மீன் வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, இந்த மா்மப் பொருளை கடலோரக் காவல் குழும போலீஸாா், கடற்படையினா் கடந்த இரண்டு நாள்களாக தீவிரமாகத் தேடி வந்தனா். இந்த நிலையில், தேவிபட்டினம் அருகே முத்துரெகுநாதபுரம் பகுதி கடலில் மிதந்து வந்த மா்மப் பொருளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு, ஆய்வு செய்தனா். அப்போது, இது பிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் உதிரிபாகம் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இது வெடிக்கும் தன்மை கொண்டதா என்பது குறித்து கண்டறிய இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைவில் இதுகுறித்த முழுவிவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.