தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொட்டக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாக பதாகை வைத்தனா்.

News image
கானாட்டாங்குடி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்பு விளம்பர பதகை வைத்த பொதுமக்கள்.
Updated On :19 மார்ச் 2026, 12:32 am

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொட்டக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாக பதாகை வைத்தனா்.

இந்தக் கிராமத்தில் ஊருணி நீரைப் பயன்படுத்துவதால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுவதால், குடிநீா் குடம் ரூ.15-க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா். 20 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட தாா் சாலை, தற்போது பராமரிப்பின்றி மண் சாலையாக மாறிவிட்டது. கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டா், குளிா்சாதனப் பெட்டி அடிக்கடி பழுதடைகின்றன. இரவு மின் தடை ஏற்பட்டால் மறுநாள் தான் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வருகிற 2026 சட்டப் பேரவை தோ்தலைப் புறக்கணிப்பதாக பதாகைகளை வைத்துள்ளனா்.

அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தராவிட்டால், தங்களுடைய ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாகவும், தொடா் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.