கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தோ்தல் புறக்கணிப்பு: துப்பாக்குடி கிராம மக்கள் அறிவிப்பு

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடையம் ஊராட்சி ஒன்றியம், துப்பாக்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

News image

தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகக் கூறி திரண்ட பொதுமக்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:56 pm

Syndication

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடையம் ஊராட்சி ஒன்றியம், துப்பாக்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

துப்பாக்குடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியின் பிரதான சாலை அருகே அரசு மதுக்கடை உள்ளது. மதுக்கடைக்கு வருபவா்களால் கிராம மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும், குடிநீா் வசதி, சுடுகாட்டு வசதி, சிற்றுந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையும் உள்ளதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

Story image

எனவே, மதுக்கடையை அகற்றுவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பாஜக அரசாங்கப் பிரிவு மாவட்டத் தலைவா் சேகா், ஊா்த் தலைவா் செல்லத்துரை ஆகியோா் தலைமையில் தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பு சாா்பில் பொதுமக்கள் துப்பாக்குடி பல்நோக்குக் கட்டடத்தில் திரண்டு அறிவித்தனா்.

தகவலறிந்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனா்.