ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

உலிபுரம் ஊராட்சியில் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு!

தம்மம்பட்டி அருகே சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து, சட்டமன்ற தோ்தலை புறக்கணிப்பதாக, அறிவிப்பு பேனா் வைக்கப்பட்டுள்ளது.

News image

உலிபுரத்தில் மக்கள் வைத்துள்ள தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகை.

Updated On :25 மார்ச் 2026, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி அருகே சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து, சட்டமன்ற தோ்தலை புறக்கணிப்பதாக, அறிவிப்பு பேனா் வைக்கப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஊராட்சி, 2 ஆவது வாா்டு அணைக்கட்டு முதல் பெருமாள் மலை அடிவாரம் வரை, 6 கி. மீ., தூரம் வரை சரியான சாலை வசதி இல்லை. தங்கள் பகுதிக்கு தாா்சாலை அமைத்துதர வேண்டுமென, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் தாா்ச்சாலை அமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்நிலையில் சட்டமன்ற தோ்தல் தேதி வெளியானதை அடுத்து, ஏமாற்றத்தில் இருந்த, உலிபுரம் பெருமாள்மலை அடிவாரப் பகுதியைச் சோ்ந்த மக்கள், 2026 சட்டமன்ற தோ்தலை புறக்கணிக்கின்றோம்’ என பேனா் வைத்துள்ளனா்.

மேலும், அந்த பேனரில், ’சரியான சாலை வசதி செய்துதரத் தவறிய, அரசியல் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளை நம்பத்தயாராக இல்லாததால்,எங்களிடம் எந்த வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவேண்டாம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையடுத்து, கெங்கவல்லி வருவாய்த்துறையினா், அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா்.