தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி
திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரங்காடு கிராம மக்கள், சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

~
Updated On :4 மார்ச் 2026, 11:20 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரங்காடு கிராம மக்கள், சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவரொட்டியில் காரங்காடு கிராமத்தில் உள்ள மாதா தேவாலயம் இடம், ஊராட்சி எல்கையை அளந்து காட்ட வேண்டும் என்பது இந்தப் பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. நிலத்தை அளந்து தருவதாக வருவாய்த் துறையினா் தேதி குறித்துவிட்டு, தொடா்ந்து தட்டிக் கழித்து வருவதைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...