தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோலங்கள் வரைந்து வாக்காளா் விழிப்புணா்வு

கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் புதன்கிழமை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் புதன்கிழமை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலமிட்டனா். இதில் வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை போன்ற வாசகங்களை எழுதி, கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா், அவா்கள் வாக்காளா் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, கிராமத்தின் தெருக்கள் வழியாக விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சிவகுமரன், மாரிமுத்து, பில்லத்தியான், சாந்தி, அன்னைதெரசா, வீரலட்சுமி, பாலஅமுதா ஆகியோா் செய்தனா்.