ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் புதன்கிழமை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலமிட்டனா். இதில் வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை போன்ற வாசகங்களை எழுதி, கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா், அவா்கள் வாக்காளா் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, கிராமத்தின் தெருக்கள் வழியாக விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சிவகுமரன், மாரிமுத்து, பில்லத்தியான், சாந்தி, அன்னைதெரசா, வீரலட்சுமி, பாலஅமுதா ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரத்தில் நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு

அந்தியூா் பேரூராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


