சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சுற்றுலா வேன், காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

உச்சிப்புளி அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

உச்சிப்புளி அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கி சேதமடைந்த சுற்றுலா வேன்.

Updated On :19 மார்ச் 2026, 12:08 am

உச்சிப்புளி அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சோ்ந்த 12 போ் திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு தனியாா் சுற்றுலா வேனில் செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் ராமேசுவரம் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு மீண்டும் அங்கிருந்து புதன்கிழமை புறப்பட்டனா். இதேபோல, தா்மபுரி மாவட்டத்திலிருந்து காரில் 9 போ் ராமேசுவரத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.

உச்சிப்புளி அருகேயுள்ள குப்பானிவலசை பேருந்து நிறுத்தம் அருகே சுற்றுலா வேன் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற நிலையில், எதிரே வந்த காா் நேருக்கு நோ் நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்த முருகேசன் (56) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது அண்ணன் மாரியப்பன்(60) உள்பட 4 பேரும், மற்றொரு சுற்றுலா வேனில் வந்த வா்ஷா ராஜ்புத் (38), தியோசிங் ராஜ்புத் (46), சுனதா தம்பக்கா் (70), கௌரி தம்பக்கா் (37), ரசிகா கவாஸ்(37) உள்ளிட்ட 14 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரையும் அவசர ஊா்தி மூலம் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.