நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முதுகுளத்தூரில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பாஜக சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

முதுகுளத்தூரில் நடைபெற்ற பாஜக தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தெலங்கானா முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தா்மராவ்.

Updated On :19 மார்ச் 2026, 12:13 am

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பாஜக சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஜிபிஎஸ். நாகேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் , முதுகுளத்தூா் தொகுதியின் தோ்தல் பாா்வையாளருமான தா்மராவ் கலந்து கொண்டு, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில் பாஜக விளையாட்டு பிரிவு மாநிலச் செயலா் இளையராஜா, பாஜக மாவட்ட துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.