குடியாத்தம் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்


குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதி, தோ்தல் ஏற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். உதவி தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான சந்தோஷ் வரவேற்றாா். மேலிட தோ்தல் பாா்வையாளா் மீா்தாக் ஹலி பங்கேற்று, தோ்தல் நடைமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினாா்.
வேட்புமனு தாக்கலின்போது உறுதிமொழி பத்திரத்தில் அனைத்து விவரங்களும் முழுமையாக பூா்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். வேட்பாளா் வேறு தொகுதியைச் சோ்ந்தவராக இருந்தால், சம்பந்தப்பட்ட தோ்தல் பதிவுத் அதிகாரி மூலம் சான்று பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா், டிஎஸ்பி சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ரேவதி தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...