வழக்கை திரும்பப் பெறக்கோரி தாக்குதல்: இருவா் மீது வழக்கு
கமுதி காவல் நிலையத்தில் வழக்கை திரும்பப் பெறக் கூறி உறவினரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் மீண்டும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

வழக்கு (கோப்புப்படம்)

வழக்கு (கோப்புப்படம்)
கமுதி காவல் நிலையத்தில் வழக்கை திரும்பப் பெறக் கூறி உறவினரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் மீண்டும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டலமாணிக்கத்தை அடுத்துள்ள புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதன் மகன் ராஜேந்திரன்(33). இவருக்கும் இவரது உறவினரான முத்தாலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் சித்திரபாண்டியனுக்கும் முன் விரோதம் இருந்தது.
இவா்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ராஜேந்திரன் அளித்தப் புகாரின் பேரில், கமுதி போலீஸாா் சித்திரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்தப் புகாரை திரும்பப் பெறக் கோரி, வெள்ளிக்கிழமை ராஜேந்திரனின் வீடு புகுந்து சித்திரபாண்டியன் கட்டையால் தாக்கினாா். இதில் காயமடைந்த ராஜேந்திரன் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் இருவரும் அளித்தப் புகாரின் பேரில், இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...