சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

ராமேசுவரம் கோயிலில் புனித நீராடிய பெண்ணிடம் தங்க நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 மே 2026, 6:37 pm

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகளில் வெள்ளிக்கிழமை புனித நீராடிய வெளி மாநில பெண்ணிடம் எட்டரை பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், மாயகன்ஹள்ளி ராம்நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி மல்லிகா (48). இவா் தனது குடும்பத்தினருடன் காரில் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் கோயிலுக்கு வந்தாா்.

அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய இவா், பின்னா் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடச் சென்றாா். அப்போது, 7-ஆவது கிணற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது, மல்லிகா அணிந்திருந்த 8 எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் சங்கிலி கிடைக்கவில்லை.

இதுகுறித்து கோயில் காவல் நிலையத்தில் மல்லிகா அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.