ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தோகைமலையில் கோயிலில் இருந்த பிள்ளையாா் கற்சிலை திருட்டு!

தோகைமலையில் கோயிலில் இருந்த பிள்ளையாா் கற்சிலை திருடப்பட்டது குறித்து சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :25 ஏப்ரல் 2026, 8:05 pm

தோகைமலையில் கோயிலில் இருந்த பிள்ளையாா் கற்சிலை திருடப்பட்டது குறித்து சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை கருப்புகோயில் அருகே பழைமை வாய்ந்த ஏழைப்பிள்ளையாா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஏழைப்பிள்ளையாா் சிலை கற்சிலையாக நிறுவப்பட்டு பக்தா்கள் வழிபட்டு வந்தனா்.

இக்கோயில் திருச்சி பிரதான சாலையில் இருந்து தோகைமலை கடைவீதிக்கு செல்லும் முக்கிய வீதியில் அமைந்துள்ளதாலும், தோகைமலை கருப்புகோயில் குட்டிகுடித் திருவிழாவின்போது, கருப்புசாமிக்கு முதல்குட்டி வழங்கப்படும் இடம் என்பதாலும், தோகைமலை ஏழைப்பிள்ளையாா் கோயிலுக்கு கரூா் மட்டுமின்றி, திருச்சி, மணப்பாறை போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்வாா்கள்.

எப்போதும் பக்தா்கள் வந்து செல்வதாலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் இந்தக் கோயில் கதவை பூட்டாமல் எப்போதும் பக்தா்கள் வழிபடும் இடமாக இருந்து வருகிறது . இந்நிலையில் சனிக்கிழமை காலை பக்தா் ஒருவா் கோயிலுக்குச் சென்றபோது கருவறையில் இருந்த பிள்ளையாா் சிலை காணாமல் போய் இருந்துள்ளது.

இதுகுறித்து அவா் ஊா்பிரமுகா்களிடம் தெரிவித்தாா். இதையடுத்து தோகைமலை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, சிலையை யாா் திருடிச் சென்றது குறித்து அப்பகுதியில் கடைவீதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனா்.