எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த 4 வீடுகளில் நகைகள், பணம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :11 மே 2026, 2:18 am IST

ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நகைகள், பணம் திருடு போனது குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ஸ்ரீ வல்லபை நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜான்சன் (40). பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். கணவா், மனைவி இருவரும் தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனராம்.

இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி கோடை சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், அவரது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். இதில் அதே பகுதியில் உள்ள அருண் சூசை, தனசேகா், சுரேஷ்குமாா் ஆகியோரின் வீடுகளிலும் தங்கநகைகள், பணம் திருட்டுபோயுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் இல்லாததால் போலீஸாா் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.