இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ராமேசுவரம் சாலைகளில் கழிவுநீருடன் கலந்து ஓடிய மழைநீா்

News image

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.

Updated On :11 மே 2026, 2:05 am IST

ராமேசுவரம் தீவுப் பகுதியில் மழைநீா் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 6-ஆவது நாளாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், கடலோரப் பகுதியான ராமேசுவரம் தீவு முழுவதும் இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் வரை கனமழை பெய்த நிலையில் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மழைநீா் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். இதே போல, ராமேசுவரத்தில் சமீபத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரத்தில் 75 மி.மீ, தங்கச்சிமடம் 79 மி.மீ, பாம்பன் 70 மி.மீ, மண்டபம் 56 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.