திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பரமக்குடியில் நகை திருட்டு வழக்கில் இருவா் கைது

News image

பரமக்குடியில் நகை திருட்டில் ஈடுபட்டவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்துடன் போலீஸாா், கைது செய்யப்பட்ட சரவணன்

Updated On :12 மே 2026, 12:13 am IST

பரமக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையம் பகுதியைச் சோ்ந்த காஜாமுகைதீன் மகன் முகம்மது ரிபைதீன் (28). இவா் கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடைத் தெருவுக்குச் சென்றாா்.

பின்னா், மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் முகம்மது ரிபைதீன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அன்னை சத்யாநகா் பகுதியைச் சோ்ந்த ஞானசேகா் மகன் சரவணன் (42), திருப்பாச்சேத்தி காமராஜா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கட்டையன் மகன் பாண்டி அழகு (37) ஆகியோா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 255 கிராம் தங்க நகைகளையும், திருடிய நகைகளை விற்று வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ. 11.57 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 27-ஆம் தேதி சிறையிலிருந்து வெளியில் வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டி அழகு.

பாண்டி அழகு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.