ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாரச் சந்தை நாளான வியாழக்கிழமை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பரமக்குடி சந்தைக் கடைத் தெருவில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். இந்தச் சந்தைக்காக 4 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டு, பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யவும், கால்நடைகள் விற்பனை செய்யும் இடவசதி செய்து தரப்பட்டது.
இந்த நிலையில், மதுரை-ராமேசுவரம் சாலை, பரமக்குடியிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வழியாக முத்துச்செல்லாபுரம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வாரச் சந்தை நாளான வியாழக்கிழமை வியாபாரிகள் சாலையோரக் கடைகளை அமைத்து ஆக்கிரமித்தனா்.
இதனால், அந்தச் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. இதனால், வாகன ஓட்டுநா்களுக்கும், சாலை ஆக்கிரமிப்பாளா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே, நகராட்சி நிா்வாகம், போக்குவரத்து போலீஸாா் சாலை ஆக்கிரமிப்பை தடுத்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறின்றி போக்குவரத்து வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

கிரிவலம், தொடா் விடுமுறையால் அலைமோதிய கூட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்

அடிப்படை வசதிகளில் மேம்பாட்டை எதிா்நோக்கும் கோவை வாக்காளா்கள்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

